வேலையை விட்ட இந்திய பெண் மருத்துவர்: ரூ.11,400 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியது எப்படி?
வேலையை விட்டு விட்டு சொந்தமாக கிளினிக் தொடங்கிய பெண், தற்போது ரூபாய் 11,400 கோடி மதிப்புள்ள வணிகத்தின் சொந்தக்காரராக மாறியுள்ளார்.
வேலையை துறந்த மருத்துவர்
இந்தியாவின் குருகிராம் பகுதியை சேர்ந்த மருத்துவர் கரிமா சாஹ்னி (Garima Sahni) என்ற பெண் தனது மருத்துவர் வேலையை விட்டு விட்டு பிரிஸ்டின் கேர்(Pristyn Care) என்ற மருத்துவ துறை வணிகத்தை சொந்தமாக தொடங்கியுள்ளார்.
மருத்துவர் கரிமா சாஹ்னி அவரது துணைவர் வைபவ் மற்றும் நண்பர் ஒருவர் இணைந்து இந்த பிரிஸ்டின் கேர் கிளினிக் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.
சிறிது காலத்திற்கு பிறகு மருத்துவர் கரிமா சாஹ்னி பிரிஸ்டின் கேர் கிளினிக்கை புதிய தோற்றத்துடன் மீண்டும் மறுவெளியீடு செய்துள்ளார்.
ஆரம்ப கட்டத்தில் காலி இடத்தில் இருந்த மருத்துவ உபகரணங்களை வைத்து சிகிச்சை தொடங்கிய நிலையில், ஒரு கட்டத்தில் இவர்களுக்கு நிதி தேவைப்பட்டுள்ளது, அப்போது Sequoia Capita என்ற முதலீட்டாளர் நிதி வழங்கி உதவியுள்ளது.
ரூ.11,400 கோடி
சிறிய நிறுவனமாக தொடங்கப்பட்ட பிரிஸ்டின் கேர் மூன்றே ஆண்டுகளில் தனித்துவமான நிறுவனமாக உருவெடுத்தது.
தற்போது இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 11,400 கோடியாகும், தற்போது பிரிஸ்டின் கேர் கிளினிக் 15 லட்சம் சிகிச்சை பெறுபவர்களுடன் மொத்தம் 42 நகரங்களில் நிறுவப்பட்டுள்ளது, அத்துடன் 800 மருத்துவமனைகளுடன் தனது கூட்டு வணிகத்தை நடத்தி வருகிறது.
2024ம் ஆண்டு பிரிஸ்டின் கேர் ரூ. 1000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Dr Garima Sahni, Gurugram, India, Haryana, Pristyn Care, businesses, businesspersons, Money, medical empire valued at Rs 11,400 crore, Sequoia Capita, investor.