திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய உணவகம்.. ஒட்டுமொத்த தெருவே நாசமான கோரம்! பதைபதைக்க வைக்கும் காட்சி
சீனாவில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒட்டுமொத்த தெருவே நிலைகுலைந்து போயுள்ளது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Liaoning மாகாணத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை 8.20 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.
Shenyang நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடி விபத்தில் அருகில் இருந்த கட்டிடங்கள் மற்றும் கார்கள் பலத்த சேதமடைந்துள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியல் பெரிய மீட்பு நடவடிக்கை மற்றும் குடியிருப்பாளர்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 33 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தை தொடர்ந்து 25 தீயணபை்பு வாகனஙக்ள் மற்றும் 110 வீரர்கள் சம்பவயிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
Shenyang நாங்கி சாலை மற்றும் Taiyuan Nan தெரு சந்திப்பில் உள்ள குடியிருப்பு மற்றும் உணவகம் அமைந்துள்ள கட்டிடத்தில் வெடிப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைியல் தெரியவந்தள்ளது.
எனினும், விபத்திற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.