இத்தாலியின் எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடிப்பு: 45 பேர் படுகாயம்!
ரோம் எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு விபத்தில் 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பயங்கர வெடிப்பு விபத்து
இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள எரிவாயு நிலையம் ஒன்றில் இன்று பெரும் வெடி விபத்து ஏற்பட்டது.
எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையாக நின்றிருந்த போது ஏற்பட்ட இந்தச் சம்பவம், வழக்கமான ஒரு நிகழ்வை பெரும் பேரழிவாக மாற்றியுள்ளது.
கேஸ் கசிவு காரணமாகவே இந்த சக்திவாய்ந்த வெடிப்பு நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
சம்பவத்தின்போது, பயங்கர சத்தத்துடன் எரிவாயு நிலையம் வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்த்தியான புகை மண்டலமாக மாறியது என நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
45 பேர் படுகாயம்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து வேகமாகப் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதேசமயம், மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களுக்கு உதவிக் கரம் நீட்டினர். இந்த வெடி விபத்தில் 45 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |