பிளேபாய் கிறிஸ் கெயிலின் லீலைகள் - கடந்த கால வரலாறு தெரியுமா?
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் கிரிக்கெட் வாழ்க்கையில் சில மறக்க முடியாத சம்பவங்கள் ரசிகர்களால் இன்றைக்கும் மறக்க முடியாதபடி அமைந்துள்ளன
ரசிகர்களால் யுனிவர்சல் பாஸ் என செல்லமாக அழைக்கப்படும் கிறிஸ் கெயில் சர்வதேச களத்தில் எப்படி அதிரடி காட்டுவாரோ அதேபோல் களத்திற்கு வெளியே பல்வேறு சர்ச்சைகளிலும் அதிரடியாக சிக்குவது வழக்கம்.
ஆனால் அவர் இம்முறை ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்திய நிலையில் ஐபிஎல் அணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளன.
இதனிடையே அவ்வப்போது கிறிஸ் கெயில் பெயர் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். ஆனால் அவர் அந்த பிரச்சனைகளில் பெரிதளவில் சிக்காமல் தப்பி விடுவார். அதில் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் கிறிஸ் கெயில் அங்குள்ள ஹோட்டலில் 3 இளம் பெண்களுடன் அரைகுறை ஆடையுடன் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் பெண்களை போலீசார் மீட்ட நிலையில் கெயிலின் பெயர் சிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அறைக்கு வந்த பெண் தெரபிஸ்ட் முன்னால் கெயில் தனது டவலை அவிழ்த்து காட்டியதாக பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
அந்த பெண் நீதிமன்றத்தில் கெயில் மீது வழக்கு தொடர பிறகு சமரசம் பேசி கெயில் அந்த வழக்கிலிருந்து விடுபட்டார். அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பிக்பேஷ் லீக் தொடரில் அதிரடியாக விளையாடி விட்டு வந்த கெயிலிடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி கண்டார்.
அப்போது அவரிடம் வெட்கப்படாதீர், உங்களை அருகில் பார்ப்பதற்காக தான் இவ்வளவு ரன்கள் அடித்தேன் போன்ற தகாத வார்த்தையில் பேசிய கெயிலுக்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் பார்ட்டி ஒன்றின் போது கெயில் மது போதையில் , செர்லின் சோப்ரா என்ற பெண்ணிடம் ஆடையை கலைய கூறியுள்ளார். பின்னர், அவரும் தனது ஆடையை கலைய முயன்றுள்ளார். நிலைமை மோசமாவதை உணர்ந்த சக வீரர்கள் கெயிலை அங்கிருந்து அப்புறப்படுத்தி அமைதிப்படுத்தினர். இப்படியான கெயிலை இனி ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் மிஸ் செய்யும் என்பதே உண்மை.