ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு சம்மதம்: காசா மக்கள் கொண்டாட்டம்!
இஸ்ரேல் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ள நிலையில், காசா மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், எகிப்து-கத்தார் ஆகிய இருநாடுகளும் முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக் கொண்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திங்கள் கிழமை அன்று ஹமாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கத்தார் பிரதம மந்திரி மற்றும் எகிப்தின் உளவுத்துறை அமைச்சருடன் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தொலைபேசி அழைப்பில் இந்த செய்தியை வழங்கினார்.
காசா கொண்டாட்டம்
ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து காசா மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய காஸாவில் உள்ள அல் அக்ஸா மருத்துவமனைக்கு வெளியே மக்கள் கூடி மகிழ்ச்சியுடன் குதித்து கோஷமிட்டு கொண்டாடினர் .
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து, தற்போது போர் நிறுத்தம் தொடர்பான பந்து இஸ்ரேலிடம் இருப்பதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |