காஸாவில் அதிகரிக்கும் மரண எண்ணிக்கை... சவக்கிடங்காகும் ஐஸ்கிரீம் லொறிகள்
இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் கொல்லப்படும் பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஐஸ்கிரீம் லொறிகளை சவக்கிடங்காக்கும் நிலைக்கு மருத்துவமனை நிர்வாகங்கள் தள்ளப்பட்டுள்ளன.
ஐஸ்கிரீம் லொறிகள் சவக்கிடங்காக
சடலங்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வது இறுகும் நெருக்கடியில் சவாலாக மாறியுள்ளது எனவும், கல்லறைத் தோட்டங்களில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹமாஸ் தரப்பால் மரண அடி வாங்கிய இஸ்ரேல், அதே உக்கிரத்துடன் தற்போது காஸா பகுதியை தரைமட்டமாக்கி வருகிறது. இந்த நிலையில், Deir Al-Balah பகுதியில் அமைந்துள்ள Shuhada Al-Aqsa மருத்துவமனையில் ஐஸ்கிரீம் லொறிகளை சவக்கிடங்காக மாற்றியுள்ளனர்.
தொடர்புடைய மருத்துவமனையில் 10 சடலங்கள் மட்டுமே சவக்கிடங்கில் பாதுகாக்க முடியும் என்பதால், தற்போது பல எண்ணிக்கையில் சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளதாலும், இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் Yasser Ali தெரிவித்துள்ளார்.
@epa
அடக்கம் செய்வது முடியாமல் போகும்
இஸ்ரேல் தரப்பு முப்படை தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில், காஸா மக்கள் தெற்கு நோக்கி புறப்பட வேண்டும் என கட்டாயப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் இதுவரை முன்னெடுத்த வான்தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 2,300 கடந்துள்ளதாக காஸா அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இதில் கால்பங்கு சிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். சுமார் 10,000 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாத சூழலில், காயங்களுடன் சிகிச்சை நாடி வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது.
@getty
போர் இதே உக்கிரத்துடன் தொடரும் என்றால், இறந்தவர்களை அடக்கம் செய்வது கூட முடியாமல் போகும் என தெரிவித்துள்ளார் மருத்துவர் Yasser Ali. கல்லறைத் தோட்டங்கள் ஏற்கனவே நிரம்பியுள்ளது, இனி புதிய பகுதி ஒன்றை ஒதுக்க வேண்டும் என்றார்.
இதனிடையே, காஸா பகுதியில் 100 சடலங்களை ஒன்றாக புதைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
@reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |