காஸா தொடர்பில் மிரட்டல் விடுத்த துருக்கி... உடனடி பதிலடி தந்த இஸ்ரேல்
போர் குற்றவாளி போன்று இஸ்ரேல் செயல்படுவதாக துருக்கி ஜனாதிபதி எர்டோகன் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற்றுள்ளது இஸ்ரேல்.
பலஸ்தீன ஆதரவு பேரணி
இஸ்தான்புல்லில் நடைபெற்ற பலஸ்தீன ஆதரவு பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் உரையாற்றும் போதே ஜனாதிபதி எர்டோகன் இவ்வாறு தெரிவித்தார்.
இதனையடுத்து உடனடி நடவடிக்கையாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் எலி கோஹன், தூதரக அதிகாரிகளை திரும்பி வருமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், உலகிலேயே மிகவும் தார்மீக ராணுவம் இஸ்ரேலிடம் உள்ளது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கமளித்துள்ளார். அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் எல்லையை கடந்து சென்று ஹமாஸ் தொடுத்த அதிரடி தாக்குதலில் இஸ்ரேலிய மக்கள் 1400 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் கடந்த 3 வாரங்களாக காஸா பகுதி மீது முன்னெடுத்த உக்கிர தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 8,000 கடந்துள்ளது. இதில் சரி பாதி பேர் சிறார்கள், பிஞ்சு குழந்தைகள் என்றே அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீன மக்களை இன அழிப்பு
மட்டுமின்றி, காஸா மீது அடுத்தகட்ட நடவடிக்கையாக தரைவழித்தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமையன்று பல லட்சம் பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய துருக்கி ஜனாதிபதி எர்டோகன்,
@reuters
காஸாவில் நடந்தேறும் படுகொலைகளின் முக்கிய குற்றவாளிகள் மேற்கத்திய நாடுகள் என்றார். இஸ்ரேல் 22 நாட்களாக போர்க்குற்றங்களை வெளிப்படையாக செய்து வருகிறது, ஆனால் மேற்கத்திய தலைவர்கள் இஸ்ரேலை போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை.
இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி போன்று நடந்து கொள்கிறது என குறிப்பிட்டுள்ள எர்டோகன், பாலஸ்தீன மக்களை இன அழிப்பு செய்து வருகிறது என்றார்.
@getty
மேலும் அவர் தெரிவிக்கையில், நிச்சயமாக, ஒவ்வொரு நாட்டுக்கும் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால் இந்த வழக்கில் நீதி எங்கே? நியாயமாகவே இல்லை. காஸாவில் உலக நாடுகள் கண் முன்னே ஒரு கொடூரமான படுகொலை நடக்கிறது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |