ஐரோப்பா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிரதமர் தேர்தல்: கடும் அச்சத்தில் ஒரு சமூக மக்கள்
நெதர்லாந்து பொதுத் தேர்தலில் கடும் வலதுசாரி அரசியல்வாதி ஒருவரது வெற்றி, ஐரோப்பா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரி தேசியவாதிகள் வாழ்த்து
நெதர்லாந்தின் டொனால்டு ட்ரம்ப் என அறியப்படும் Geert Wilders என்பவரது கட்சியே நெதர்லாந்தில் ஆட்சிக்கு வர இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மை இல்லை என்றாலும், கூட்டணி ஆட்சியை முன்னெடுக்க இருப்பதாக Geert Wilders அறிவித்துள்ளார்.
@getty
Geert Wilders-ன் வெற்றியை அடுத்து ஐரோப்பா முழுவதும் உள்ள வலதுசாரி தேசியவாதிகள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆர்வம் காட்டியுள்ளனர். இஸ்லாமிய மக்களின் புலம்பெயர்தலே ஐரோப்பிய நாடுகளில் தீவிர்வாதத்தை வளர்ப்பதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருபவர் Geert Wilders.
மட்டுமின்றி, மசூதிகளுக்கும் குரானுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதுபோன்ற காரணங்களாலையே 2004 முதல் அவர் தீவிர பொலிஸ் பாதுகாப்பில் இருந்து வருகிறார்.
2009 முதல் பிரித்தானியாவில் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. தமது கட்சி நெதர்லாந்து அரசியலில் பெரும் வெற்றியை ஈட்டும் என Geert Wilders கூட எதிர்பார்க்கவில்லை என்றே கூறப்படுகிறது.
@epa
மட்டுமின்றி, தேர்தல் பதிவுக்கும் மூன்று நாட்கள் முன்னர் தான் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதை கட்சியின் தேர்தல் நேர தலைமைகமாக பயன்படுத்தியுள்ளனர். மேலும், தேர்தல் பரப்புரையின் கடைசி கட்டத்தில் தான் இவரது கட்சி மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
குழப்பமானதாகவும் மாறக்கூடும்
புலம்பெயர் மக்கள் வருகையை கட்டுப்படுத்த இருப்பதாகவும், குடியிருப்பு சிக்கல்களுக்கு தீர்வு காண இருப்பதாகவும், சுகாதார சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரப்புரையில் அவர் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
அத்துடன் தனது இஸ்லாமியர்களுக்கு எதிரான கடும்போக்கு நிலையை பரப்புரைகளில் குறைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், நெதர்லாந்தின் புதிய பிரதமார இவர் ஆட்சிக்கு வருவார் என்றால், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சிமாநாடுகள் பதட்டமானதாகவும், மேலும் குழப்பமானதாகவும் மாறக்கூடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
@getty
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நெதர்லாந்து வெளியேற வேண்டும் என்று தொடர்ந்து பரப்புரை செய்து வருபவர் Geert Wilders. நெதர்லாந்து மக்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும், தமது கொள்கையில் தாம் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, நெதர்லாந்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் இனி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றே அஞ்சப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |