சாலை பலமுறை கவிழ்ந்த ஜேர்மன் பேருந்து: ஆஸ்திரியாவில் அரங்கேறிய பயங்கர விபத்து
ஆஸ்திரியாவில் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 31 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 32 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
பேருந்து கவிழ்ந்து விபத்து
ஆஸ்திரியாவில் ஜேர்மன் பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 32 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் 31 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் ஏராளமான பயணிகள் காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Euro news
விபத்துக்கான காரணம்
விபத்து குறித்து தீயணைப்புத் துறை தலைவர் ஜெரால்ட் பீட்டர் தெரிவித்த தகவலில், “ஸ்லாட்மிங்கை நோக்கிய கடைசி வளைவில் பேருந்து சாலையை விட்டு வெளியேறி, பல முறை கவிழ்ந்து, பின்னர் ஒரு பணிமனை கட்டிடத்தின் மேல் மோதி நின்றது," என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விபத்திற்கான முழுமையான காரணம் தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.