இந்தியா வந்த ஜேர்மன் சேன்ஸலர்: தூதரகம் பகிர்ந்துள்ள படங்கள்
சமீபத்தில் ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் இந்தியா வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இந்தியாவிலுள்ள ஜேர்மன் தூதரகம் பகிர்ந்துள்ளது.
தூதரக ஊழியர்களின் ஃபேவரைட் தேநீர்
இந்தியாவிலுள்ள ஜேர்மன் தூதரக ஊழியர்கள், புதுடில்லியிலுள்ள சாணக்யபுரி என்னும் இடத்தில் அமைந்துள்ள தேநீர்க்கடை ஒன்றில் வழக்கமாக தேநீர் அருந்துவார்களாம்.
ஆக, இந்தியா வந்த தங்கள் சேன்ஸலர் அந்த அருமையான தேநீரை சுவைக்காமல் சென்றால் எப்படி என்று சொல்லி, அவரை அந்த தேநீர்க்கடைக்கே அழைத்துச் சென்றுள்ளார்கள்.
சேன்ஸலர் ஷோல்ஸும், அந்த தேநீர்க்கடையின் முன் நின்றபடியே அந்த தேநீரை அருந்தி மகிழ்ந்திருக்கிறார்.
அந்த செய்தியை, புகைப்படங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளது ஜேர்மன் தூதரகம்.
How can you experience India without a delicious cup of Chai? We took @Bundeskanzler Olaf Scholz to our favorite tea shop at a street corner in Chanakyapuri. You should all go! A true taste of India. pic.twitter.com/SeYXujmJf0
— German Embassy India (@GermanyinIndia) February 26, 2023