ரஷ்யாவிலிருந்து நூற்றுக்கணக்கான ஜேர்மன் அரசு ஊழியர்கள் வெளியேற்றம்: பின்னணி என்ன?
நூற்றுக்கணக்கான ஜேர்மன் அரசு ஊழியர்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஜேர்மனியை நிர்பந்திக்கம் ரஷ்யா
ரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஜேர்மன் அரசு ஊழியர்கள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஜேர்மன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜூன் தொடக்கத்தில், மாஸ்கோவில் உள்ள Goethe Institute கலாச்சார அமைப்பு மற்றும் ஜேர்மன் பள்ளி போன்ற பொது நிறுவனங்களில் உள்ள ஜேர்மன் இராஜதந்திர பணியாளர்களின் இருப்பை குறைக்க பெர்லினை நிர்பந்திக்க ரஷ்யா முடிவு செய்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Kremlin file photo
உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு ஜேர்மனி-ரஷ்யா உறவுகள்
2014-ல் கிரிமியாவை இணைத்ததில் தொடங்கி, கிழக்கு உக்ரைனில் நடந்து வரும் மோதலுடன் தொடர்ந்த ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு ஜேர்மனி-ரஷ்யா உறவுகளை கணிசமாக பாதித்தது.
உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு முன்பு ரஷ்யாவின் முக்கிய பொருளாதார பங்காளியாக இருந்த ஜேர்மனி, சமீபத்தில் ரஷ்யாவுடனான உறவை துண்டித்து, நெருக்கடியில் இருக்கும் உக்ரைனுக்கு நிதி ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் உதவிவரிக்கிறது.
AAP Photo
ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து, உக்ரைனில் அதன் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தது. இந்த தடைகள் ரஷ்ய பொருளாதாரத்தின் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகளை குறிவைத்தன.