ரஷ்யாவுக்காக சொந்த நாட்டை உளவு பார்த்த ஜேர்மன் உளவாளி கைது
ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் தனது சொந்த உளவுத்துறை அதிகாரியை ஜேர்மன் ஃபெடரல் உளவுத்துறை கைது செய்துள்ளது.
தேசத்துரோக குற்றச்சாட்டு
வியாழக்கிழமை கைது செய்யப்பட அந்த நபர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கார்ஸ்டன் எல். என்ரூ அடையாளப்படுத்தப்பட்டுள்ள அவர் ஜேர்மன் தனியுரிமைச் சட்டங்களின் கீழ் பெர்லினில் கைது செய்யப்பட்டார்.
Reuters
கார்ஸ்டன் 2022-ஆம் ஆண்டில், அவர் ரஷ்ய உளவுத்துறை நிறுவனத்துடன் தனது பணியின் போது வந்த தகவலைப் பகிர்ந்து கொண்டதாக்க கூறப்படுகிறது. அந்தத் தகவல் தேசிய ரகசியமாகக் கருதப்படுகிறது.
இதுபோன்ற உளவாளிகளை ஜேர்மனி கண்டுபிடித்தது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏப்ரலில் மாஸ்கோவிற்கு முக்கியமான உளவுத்துறையை இரகசியமாக வழங்கிய 40 ரஷ்ய 'உளவுகாரர்களை' ஜேர்மன் அரசாங்கம் வெளியேற்றியது.
'உளவு' நடவடிக்கை ஏன் அதிகரித்துள்ளது?
உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து ஜேர்மனியும் ரஷ்யாவும் பகையில் உள்ளன. ஜேர்மனி உக்ரைனின் பக்கம் நிற்கும் அதே வேளையில், நார்ட் ஸ்ட்ரீம் 1 பைப்லைன் மூலமாக ரஷ்யா ஜேர்மனிக்கு இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வழங்கியது.
பால்டிக் கடலுக்கு அடியில் ரஷ்யாவிலிருந்து ஜேர்மனி வரை செல்லும் இந்த குழாய் ஐரோப்பிய நாடுகளின் உயிர்நாடியாக கருதப்படுகிறது.
ஜூலை மாதம்தான், பராமரிப்பைக் காரணம் காட்டி ரஷ்யா முதல் முறையாக நோர்ட் ஸ்ட்ரீம் 1ஐ மூடியது. குழாயை இயக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட 12 மீட்டர் டர்பைன் பழுதுக்காக கனடாவில் சிக்கியிருப்பதாக அது மேலும் கூறியது.
அதன்பிறகு, நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 பைப்லைன்கள் இரண்டையும் சுற்றியுள்ள பல குண்டுவெடிப்புகள் விநியோகத்தில் குறிப்பிடத்தக்க மந்தநிலையை ஏற்படுத்தியது.