ஜேர்மனி அரசை கவிழ்க்க சதித்திட்டம் முறியடிப்பு: அரசு எடுக்க இருக்கும் கடும் நடவடிக்கை
ஜேர்மனி அரசை கவிழ்க்க சமீபத்தில் சதி ஒன்று முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, துப்பாக்கி விதிகளை கடினமாக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
அரசைக் கவிழ்க்க சதி
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத, Reichsbürger இயக்கம் என்னும் அமைப்பு, ஜேர்மனியில் ஆளும் அரசைக் கவிழ்த்துவிட்டு, Heinrich XIII Prince Reuss என்பவர் தலைமையில் மன்னராட்சியை அமைக்க திட்டமிட்டுள்ள விடயத்தை ஜேர்மன் பொலிசார் கண்டறிந்தார்கள். ஜேர்மனியில் சுமார் 100 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகளைத் தொடர்ந்து சந்தேகத்துக்கிடமான 50 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
@AP/Michael Probst
அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கை
இந்த சதித்திட்டம் ஜேர்மனியில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியதைத் தொடர்ந்து, அரசு துப்பாக்கி விதிகளைக் கடுமையாக்க உள்ளது.
இது குறித்துப் பேசிய ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser, அரசு துப்பாக்கி விதிகளை கடுமையாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.
ஆயுதங்களை அகற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் அதிகபட்ச அழுத்தம் கொடுக்க இருப்பதாக தெரிவித்த அவர், அதனால்தான் விரைவில் துப்பாக்கி விதிகளை கடுமையாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.
சமீபத்தில் பொலிசார் மேற்கொண்ட ரெய்டுகளின்போது 1,000க்கும் அதிகமான Reichsbürger அமைப்பைச் சார்ந்தவர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
@Lisi Niesner/REUTERS