ஒரு கொசுவால் சாகும் நிலைக்குச் சென்ற ஜேர்மன் இளைஞர்., எதிர்கொண்ட நினைத்துப்பார்க்காத கொடுமைகள்
கொசு கடித்ததால் நான்கு வாரங்கள் கோமாவில் இருந்தது மட்டுமல்லாமல், 30 அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளான கொடுமையான சம்பவம் ஜேர்மனியில் 27 வயது இளைஞருக்கு நடந்துள்ளது.
கொசு கடித்தால் மிகவும் எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் சில சமயங்களில் டெங்கு போன்ற நோய்கள் உண்டாகி உயிரிழக்கவும் நேரிடும். பூச்சிகள் கடிக்கும்போது சில வைரஸ்கள் அல்லது ஒட்டுண்ணிகளைக் கொண்திருந்தால் கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.
அனைத்துக்கும் காரணம் ஒரு கொசு
சமீபத்தில், ஒரு ஜேர்மன் இளைஞர் நான்கு வாரங்கள் கோமா நிலையில் இருந்தது மட்டுமின்றி 30 அறுவை சிகிச்சைகளைச் செய்ய வேண்டியிருந்தது உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டார். இவை அனைத்துக்கும் காரணம் ஒரு கொசு.
GettyImages
ஜேர்மனியின் Roedermark-ல் வசிக்கும் 27 வயதான செபாஸ்டின் ரோட்ஷ்கே (Sebastian Rotschke), 2021 கோடையில் ஆசிய புலி கொசுவால் (Asian tiger mosquito) கடிக்கப்பட்டார். அவர் முதலில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை அனுபவித்தார். அது வெறும் ஆரம்பம் தான்.
எதிர்கொண்ட கொடுமைகள்
ஏனெனில், செபாஸ்டின் ரோட்ஷ்கே தனது இரண்டு கால்விரல்களையும் பகுதியளவு துண்டித்து, முப்பது அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது, மேலும் நான்கு வாரங்கள் கோமா நிலையில் இருந்தார். அதுமட்டுமின்றி, ரத்தத்தில் விஷம் கலந்ததால், கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் செயலிழப்பையும் பல சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
மேலும், செபாஸ்டின் ரோட்ஷ்கே தனது தொடை பகுதியில் உருவான ஒரு சீழ் அகற்றுவதற்காக அவரது தொடையில் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தது.
அவரது திசு மாதிரியின்படி, வீரியம் மிக்க பாக்டீரியாக்கள் அவரது இடது தொடையின் பாதிவரை சாப்பிட்டுவிட்டதால் அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அவர் நினைத்தார்.
பாதிக்கப்பட்டவரின் அனுபவம்
தனது அனுபவத்தைப் பகிர்ந்த செபாஸ்டின் ரோட்ஷ்கே, "நான் வெளிநாட்டில் இருந்ததில்லை. கடித்தது இங்கேதான் நடந்திருக்க வேண்டும்... நான் படுத்த படுக்கையாகிவிட்டேன், நான் கழிவறைக்கு கூட செல்லமுடியவில்லை, காய்ச்சல் ஏற்பட்டது, மேலும் சாப்பிட முடியாமல் போனது. அது முடிவுக்கு வருகிறது என்று நினைத்தேன்.
திடீரென்று என் சாம்பல் நிற உடைகள் நனைந்திருப்பதைக் கண்டேன். திடீரென்று என் இடது தொடையில் ஒரு பெரிய சீழ் உருவானது. இவை அனைத்திற்கும் காரணம் ஆசிய புலி கொசு கடித்தது தான் என்று மருத்துவர்கள் யூகித்து, ஒரு நிபுணரை அழைத்தனர்" என்று கூறினார்.
தற்போது நோய்வாய்ப்பட்ட விடுப்பில் இருக்கும் அவர், "இதுவரை நலமாக உள்ளேன்" என்றும், இதுபோன்ற கொசுக் கடிகளால் மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
ஆசிய புலி கொசுக்கள்
கட்டுக் கொசுக்கள் என்றும் அழைக்கப்படும் ஆசிய புலி கொசுக்கள், கிழக்கு குதிரை மூளை அழற்சி (EEE), ஜிகா வைரஸ் (Zika), மேற்கு நைல் வைரஸ் (West Nile virus), சிக்குன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற தீங்கு விளைவிக்கும் நோய்களை பரப்பக்கூடிய பகல்நேர பூச்சிகள் ஆகும்.