துப்பாக்கியுடன் மர்ம நபர் நடமாடுவதாக கிடைத்த தகவல்: ஜேர்மன் பொலிசாருக்கு கிடைத்த ஏமாற்றம்
ஜேர்மன் நகரமொன்றில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அவர்கள் அந்த நபரை கைது செய்ய, அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பொலிஸ் சீருடையில் நடமாடிய நபர்
ஜேர்மன் நகரமான பிராங்க்பர்ட்டில், அமெரிக்க பொலிஸ் சீருடையில் ஒருவர் நடமாடிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்து அவரிடம் துப்பாக்கி இருக்கலாம் என சந்தேகித்த மக்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
GETTY IMAGES
அவர் மீது பாய்ந்து அவருக்கு கைவிலங்கிட்ட பொலிசார், அவரை சோதனையிட்டுள்ளனர். அவரிடம் ஒரு துப்பாக்கியும் இருந்துள்ளது. ஆனால், அது ஒரு பொம்மைத் துப்பாக்கி.
பின்னர் அவரை பொலிசார் விடுவித்துவிட்டார்கள்.
யார் அந்த நபர்?
விடயம் என்னவென்றால், அந்த நபர் விடுதி ஒன்றில் நடனமாடும் நபர். அதற்காகவே அவர் அந்த உடை அணிந்திருந்திருக்கிறார்.
ஆனால், பொலிஸ் உடையின் பலம் என்ன என்பதை அவர் குறைத்து எடைபோட்டுவிட்டார் என்கிறார்கள் பொலிசார்.