பிரித்தானிய சிறையில் இருந்து ஜேர்மன் டென்னிஸ் வீரர் விடுதலை! கிறிஸ்துமஸ் பரிசு என தாய் உருக்கம்
வரி ஏய்ப்பு புகாரில் கைது செய்யப்பட்ட ஜேர்மன் டென்னிஸ் விளையாட்டு வீரர் பிரித்தானிய சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார்.
சாம்பியன் வீரர்
ஜேர்மனியைச் சேர்ந்த போரிஸ் பெக்கர்(54), நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக விளங்கினார். இவர் ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர்.
லண்டனில் வசித்து வந்த பெக்கர், கடந்த 2002ஆம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கினார். 3.1 மில்லியன் சொத்துக்கள் மற்றும் கடனை செலுத்துவதை தவிர்ப்பதற்காக மறைத்த அவர், திவால் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டார்.
@Getty Images
சிறை தண்டனை
இதனால் பெக்கருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தெற்கு லண்டனில் உள்ள சவுத்வார்க் நீதிமன்றம் பெக்கர் மீதான வழக்கு விசாரணையை முன்னெடுத்தது.
அதனைத் தொடர்ந்து வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் ஹண்டர்காம்ப் சிறைக்கு மாற்றப்பட்டார். பிரித்தானிய குடிமகனாக இல்லாததால் அவர் 12 மாதங்களுக்கும் மேல் சிறை தண்டனையை பெற்றார்.
@Kirsty O'Connor/PA
விடுதலை
இந்த நிலையில் நேற்று பெக்கர் சிறையில் இருந்து விடுதலையானார். தன் சொந்த நாடான ஜேர்மனிக்கு அவர் பயணம் மேற்கொண்டார். தனது மகன் விடுதலையானதை, ''நான் எதிர்பார்க்கும் சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு'' என பெக்கரின் தாயார் எல்விரா கூறினார்.
@Reuters