இளம்பெண்ணை அடிமையாக்கி கணவர் உட்பட பலருக்கு விருந்தாக்கிய ஜேர்மன் பெண் வழக்கு: இன்று தீர்ப்பு
இளம்பெண் ஒருவரை அடிமையாக்கி, தன் கணவர் உட்பட பலருக்கு விருந்தாக்கிய ஜேர்மன் பெண் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
பெண் பிள்ளைகளுக்குத் தாயாக இருந்தும்..
ஜேர்மன் நாட்டவரான Nadine K என்னும் பெண், தான் இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தாயாக இருந்தும், யாஸிடி இன இளம்பெண்ணான Naveen al K (22) என்பவரை அடிமையாக்கி, தன் கணவர் உட்பட பலருக்கு விருந்தாக்க உதவியாக இருந்துள்ளார்.
Nadine, 2014ஆம் ஆண்டு, ஜேர்மனியிலிருந்து தன் கணவனுடன் சிரியாவுக்குச் சென்று ஐ எஸ் அமைப்புடன் இணைந்து அங்கு நான்கு ஆண்டுகள் இருந்துள்ளார்.
பின்னர் அவரது குடும்பம் ஈராக்குக்கு திரும்பிய நிலையில், 2016ஆம் ஆண்டு, Nadineஉடைய கணவர், யாஸிடி இன இளம்பெண்ணான Naveenஐ அடிமையாகக் கொண்டுவந்துள்ளார்.
பலருக்கு விருந்தாக்கப்பட்ட இளம்பெண்
Naveen, பல்வேறு போராளிகளுக்கு வீட்டு வேலை செய்யவும், அவர்களுடன் பாலுறவுகொள்ளவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
Nadineடைய கணவரும் பலமுறை தன் மனைவி அறிய Naveenஐ வன்புணர்ந்திருக்கிறார், தாக்கியிருக்கிறார்.
இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தாயாக இருந்தும் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் Nadine இந்தக் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததுடன், Naveen தப்பிச்செல்லாமல் இருப்பதற்காக, அவரது பர்தாவை எடுத்து வைத்துக்கொண்டுள்ளார். ஐ. எஸ் கட்டுப்பாடுகள் கொண்ட அந்த பகுதியில், பர்தா இல்லாமல் Naveenஆல் வீட்டை விட்டு கூட வெளியேறமுடியாது.
2019ஆம் ஆண்டு, ஐ எஸ் அமைப்பு தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து Nadine குடும்பம் ஈராக்கிலிருந்து தப்பியோடும்போது குர்திஷ் படைகளிடம் சிக்கியுள்ளது.
2022ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 31ஆம் திகதி, ஜேர்மனிக்குள் நுழையும்போது, Nadine கைது செய்யப்பட்டார்.
இன்று தீர்ப்பு
சிரியா பாலைவனத்தில், கூடாரம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த யாஸிடி இன இளம்பெண்ணான Naveenஐ, ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஆவணப்பட தயாரிப்பாளரான Alan Duncan என்பவர் மீட்டு பாதுகாப்பான இடம் ஒன்றில் கொண்டு சேர்த்துள்ளார்.
Naveen கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கு ஜேர்மனியில் நடைபெற்றுவந்த நிலையில், மொழி தெரியாத ஊரில், முன்பின் தெரியாதோர் முன்னிலையில், அவர் கண்ணீருடன் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நீதிமன்றத்தில் விவரித்தபோது தான் அழுதுகொண்டே இருந்ததாக தெரிவிக்கிறார் Alan Duncan.
இந்நிலையில், Naveen வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |