ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து ஜேர்மனி எடுத்துள்ள நடவடிக்கையொன்று
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, ஜேர்மனியிலுள்ள யூத மற்றும் இஸ்ரேல் நாட்டு நிறுவனங்களுக்கான பாதுகாப்பை ஜேர்மனி அரசு அதிகரித்துள்ளது.
பாதுகாப்பை அதிகரித்துள்ள ஜேர்மனி
ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், பொலிசார் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி மூலம் தன்னிடம் தெரியப்படுத்தியதாக தெரிவித்துள்ளார் மெர்ஸ்.
அதைத் தொடர்ந்து அவர் ஃபெடரல் பாதுகாப்புக் கவுன்சிலைக் கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார்.
தனது இருப்பையும் தன் குடிமக்களையும் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது என்று கூறியுள்ள மெர்ஸ், அதே நேரத்தில், பிரச்சினையை பெரிதாக்கும் நடவடிக்கைகளை இருதரப்பும் தவிர்க்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதுடன், ஜேர்மனி தூதரக ரீதியில் அதற்கு உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டரும் (Alexander Dobrindt), ஜேர்மனியிலுள்ள யூத மற்றும் இஸ்ரேல் நாட்டு நிறுவனங்களுக்கான பாதுகாப்பை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுயுள்ளார்.
மத்திய கிழக்கு பகுதியிலிருந்து அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது என்னும் நிலையில், ஜேர்மனியிலுள்ள யூத மற்றும் இஸ்ரேல் நாட்டு நிறுவனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில், கொள்கை அடிப்படையிலான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |