ஜேர்மனியில் திங்கட்கிழமையும் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள தொழிலாளர்கள் யூனியன்
ஜேர்மனியின் முக்கிய தொழிலாளர் யூனியன், பெர்லின் விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்களை திங்கட்கிழமை வேலைநிறுத்தத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட விமான சேவை
ஏற்கனவே Duesseldorf, Hamburg, Cologne-Bonn மற்றும் Stuttgart விமான நிலைய ஊழியர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் 700க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
REUTERS/Jana Rodenbusch
இந்நிலையில், பெர்லின் விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள், திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணி முதல் நள்ளிரவு 12.00 வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளார்கள்.
இரவு நேர, வார இறுதி நாட்கள் மற்றும் பொதுவிடுமுறைகளின்போது செய்யும் பணிக்கு கூடுதல் ஊதியம் வழங்கக் கோரி இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
WDKY