மோசமாக நடத்தும் அமெரிக்கா... எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என அழைக்கும் ஜேர்மனி
அமெரிக்காவில் மாணவர்களின் விசா குறித்த நிலையற்ற தன்மை நிலவும் நிலையில், ஜேர்மனிக்கு கல்வி கற்க வருமாறு அந்நாடு இந்திய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
எங்கள் நாடுக்கு வாருங்கள்
சமீபத்தில் கூட இந்திய மாணவர் ஒருவரை குற்றவாளி போல அமெரிக்க அதிகாரிகள் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், நாங்கள் ஒழுங்கற்றவர்களோ நிலையற்றவர்களோ அல்ல, எங்கள் நாட்டுக்கு கல்வி கற்க வாருங்கள் என இந்திய மாணவர்களுக்கு ஜேர்மனி அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய தலைநகர் புதுடெல்லியில் பேசிய ஜேர்மன் தூதரான Dr பிலிப் (Dr Philipp Ackermann), இந்திய மாணவர்கள் மற்ற நாடுகளில் சந்திக்கும் கஷ்டங்களுக்கு மத்தியில், மாணவர்கள் எங்கள் பல்கலைகளில் படிக்க ஆர்வம் காட்டிவருவதை கவனிக்கிறோம்.
கடந்த சில மாதங்களில் ஜேர்மனியில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றார்.
நாங்கள் நம்பத்தகுந்த கூட்டாளர்கள், எங்கள் நாட்டுக்கு நீங்கள் கல்வி கற்க வந்தால், நாங்கள் உங்கள் சமூக ஊடகங்களை சோதனையிட மாட்டோம் என்றும் கூறியுள்ளார் Dr பிலிப்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |