போர்ச்சூழலையும் மீறி சாதித்துள்ள ஜேர்மனி
உக்ரைன் போர்ச்சூழலையும் மீறி ஜேர்மனியின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக, இரண்டாவது காலாண்டில், எதிர்பார்த்ததைவிட ஜேர்மனியின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது.
உக்ரைன் போர் பல நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அவற்றின் பொருளாதாரத்தை பாதித்துள்ள நிலையில் ஜேர்மனியையோ எதிர்பார்த்ததைவிட பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 0.1 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பெடரல் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பூஜ்யம் அளவிலேயே இருக்குமென கணிக்கப்பட்டிருந்தது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடு என அழைக்கப்படும் ஜேர்மனி, ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து எரிபொருள் மற்றும் உனவுப்பொருட்களில் விலைகள் உயர்ந்ததால் பணவீக்கம் அதிகரிக்க, பொருளாதாரத்தில் வேகம் குறையத் துவங்கியது.
குறிப்பாக எரிபொருளுக்காக ரஷ்யாவை அதிக அளவில் சார்ந்திருந்த நிலையில், ரஷ்யாவோ போர் துவங்கியபின் எரிவாயு வழங்கலைக் குறைக்கத்துவங்கியது.
மொத்தமாக அது எரிவாயுவை நிறுத்திவிடக்கூடும் என்ற அச்சுறுத்தல் உருவானதால் எரிவாயு விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அது தொழில்களை கடுமையாக பாதிக்கத் துவங்கியது.
ஆனாலும், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேர்மனி போர்ச்சூழலையும் தாண்டி சாதித்துக்காட்டியுள்ளது.