அகதிகளை நாடுகடத்தும் விடயம்... ஜேர்மன் அமைச்சர்கள் சந்திப்பில் விவாதம்
நேற்று, ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஜேர்மன் உள்துறை அமைச்சர்களின் சந்திப்பு ஒன்று நடைபெற்ற நிலையில், அந்த சந்திப்பில், அகதிகளை நாடுகடத்தும் விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் அமைச்சர்கள் சந்திப்பு
நேற்று, ஹாம்பர்க் மாகாண உள்துறை அமைச்சரான ஆண்டி (Andy Grote) தலைமையில், 16 மாகாண உள்துறை அமைச்சர்கள் பங்கேற்ற சந்திப்பு ஒன்றில், ஃபெடரல் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டரும் (Alexander Dobrindt) கலந்துகொண்டார்.

சந்திப்பில், அகதிகளை நாடுகடத்துவது தொடர்பில் விவாதம் ஒன்று முன்வைக்கப்பட்டது.
அதாவது, குற்றச்செயல்களில் ஈடுபட்ட அகதிகளை நாடுகடத்தும் விடயத்தில் தடையாக இருக்கும் சட்டச்சிக்கல்களை குறைக்கவேண்டும் என்ற கருத்தை ஆண்டி முன்வைத்தார்.
அவர்கள் எந்த நாட்டவர்களாக இருந்தாலும் சரி, தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் அகதிகள் ஏன் நம் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் நம் குடிமக்களுக்கு விளக்கிக்கொண்டிருக்கமுடியாது என்று கூறிய ஆண்டி, இந்த விடயம், சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் உக்ரைனிலிருந்து வந்துள்ள அகதிகளுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |