ரஷ்ய எரிவாயுவைத் தடை செய்யத் தயாராக இல்லை! வெளிப்படையாக கூறிய ஜேர்மனி
ரஷ்ய எரிவாயுவைத் தடை செய்ய ஜேர்மனி தயாராக இல்லை என அந்நாட்டு பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எரிசக்தி விநியோகத்தை ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு கைவிடுவது என்பது பற்றிய பேச்சுவார்த்தைகள் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக், ரஷ்ய எரிசக்திக்கு தடை விதிப்பது குறித்து ஐரோப்பிய உறுப்பு நாடுகள் பிளவுபட்டுள்ளதாகக் கூறினார்.
ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு இரண்டையும் தடை செய்வதற்கு ஹங்கேரி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
உலகளவில் உணவு நெருக்கடி ஏற்படும்! ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
இந்நிலையில் ஜேர்மன் பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக் கூறியதாவது, ஜேர்மனியே எரிவாயுவைத் தடை செய்யத் தயாராக இல்லை, ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய எண்ணெய் மீது முழுமையாக தடை விதிக்க முடியும் என்று கூறினார்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளால் வெளிப்படையாக விவாதிக்கப்படும் ரஷ்ய எண்ணெயை படிப்படியாக கைவிடுவதற்கான காலக்கெடு இதுவாகும்.
எண்ணெய் தடையை சமாளிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாங்கள் அடைந்துவிட்டோம், ஆனால் இதனால் எந்த விளைவும் ஏற்படாது என்று அர்த்தமல்ல என ராபர்ட் ஹேபெக் எச்சரித்துன்னார்.
ஜேர்மனி தனது எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கை 35% லிருந்து 25% ஆக குறைத்துள்ளது.
ஆனால் முழு தடை ஏற்பட்டால், தேவையை பூர்த்தி செய்யக்கூடிய மாற்று விநியோகர்களைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.