அடுத்தது என்ன... தலையணையா? ஆதரவு தெரிவித்த ஜேர்மனியை நக்கலடித்த உக்ரைன் மேயர்
உக்ரைனுக்கு ஜேர்மனி 5,000 இராணுவ தலைக்கவசம் வழங்கியதை Kyiv மேயர் நக்கலடித்துள்ளார்.
ரஷ்யா படையெடுப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க மறுத்த ஜேர்மனி, 5000 இராணுவ தலைக்கவசத்தை வழங்கி தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த சாதனம் ஆயுதமில்லை, ஆனால் அது உதவும். இந்த மோதலில் தொடர்ந்து ஜேர்மனி இவ்வாறு தான் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளிக்கும்.
இந்த மோதலுக்கு அமைதியான வழியில் தீர்வு காண நாங்கள் பணியாற்றி வருகிறோம் என ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் Christine Lambrecht கூறினார்.
வார இறுதியில், ஜேர்மனியும் உக்ரைனுக்கு கள மருத்துவமனையை வழங்கும் என்று Lambrecht கூறினார்.
இந்நிலையில், ஜேர்மனி 5000 இராணுவ தலைக்கவசம் அனுப்பியுள்ளது நகைச்சவையாக இருப்பதாக உக்ரைன் தலைநகர் Kyiv-யின் மேயர் Vitali Klitschko நக்கலடித்துள்ளார்.
ஜேர்மன் அரசாங்கத்தின் நடத்தை என்னை வாயடைக்கச் செய்கிறது.
எந்த நேரத்திலும் உக்ரைனில் மற்றொரு படையெடுப்பைத் தொடங்கக்கூடிய முழு ஆயுத பலம் கொண்ட ரஷ்யப் படைகளை நாங்கள் எதிர்கொள்ள இருக்கிறோம் என்பதை ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் உணரவில்லை.
ஜேர்மனி அடுத்து என்ன வகையான ஆதரவை அனுப்பும், தலையணைகளா? என Vitali Klitschko நக்கலடித்துள்ளார்.