பழிக்கு பழி: ரஷ்ய தூதரகங்களை மூட ஜேர்மனி உத்தரவு
ஜேர்மனியில் இயங்கிவரும் ரஷ்ய தூதரகங்களை மூட ஜேர்மனி உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாடு
முன்னதாக, ரஷ்யாவில் செயல்படக்கூடிய ஜேர்மன் தூதரக ஊழியர்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் எண்ணிக்கைக்கு மாஸ்கோ கட்டுப்பாடுகளை நிர்ணயித்தது.
கலாசார அமைப்புகள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் உட்பட 350 ஜேர்மன் அரசு அதிகாரிகள் அதிகபட்சமாக ரஷ்யாவில் இருக்க முடியும் என்று ரஷ்ய அரசாங்கம் சமீபத்தில் கூறியது.
iStock
பழிக்கு பழி
இதற்கு பழிதீர்க்கும் வகையில், ஜேர்மனியில் உள்ள ஐந்து தூதரகங்களில் நான்கு தூதரகங்களை மூடுமாறு ரஷ்யாவிடம் கூறியதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Christofer Burger புதன்கிழமையன்று பெர்லினில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே பணியாளர்கள் மற்றும் கட்டமைப்புகளின் சமநிலையை உருவாக்கும் நோக்கம் கொண்டது" என கூறினார்.
நவம்பர் மாதத்திற்குள் ரஷ்யாவில் உள்ள மூன்று தூதரகங்களை ஜேர்மனி மூட வேண்டும் என்று Christofer கூறினார்.
இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு பெர்லினில் உள்ள தூதரகத்தையும் மேலும் ஒரு தூதரகத்தையும் தொடர்ந்து செயல்பட ரஷ்யா அனுமதிக்கப்படும் என்றார்.