2024-ல் ஜேர்மனி திட்டமிடும் புதிய தடை! எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
2024 முதல் பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிவாயு வெப்பமூட்டும் நிறுவலை தடை செய்ய ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.
தடை செய்ய திட்டம்
ஜேர்மனி அடுத்த ஆண்டு முதல் பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிவாயு வெப்பமாக்கல் அமைப்புகளை (oil and gas heating systems) நிறுவுவதை தடை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டங்களுக்கு புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டங்கள் அமைச்சரவையில் கோபமான பிளவுகளைத் தூண்டுகின்றன.
நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்குகளை சந்திக்கும் முயற்சியில் ஜேர்மனியின் வெப்ப அமைப்புகளை மாற்றும் வகையில் தீவிர திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அனால், இது செயல்பட முடியாதது மற்றும் பாரபட்சமானது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
German flag Source: iStock/photosvit
ஜேர்மனியின் 41 மில்லியன் குடும்பங்களில் பாதி பேர் தற்போது இயற்கை எரிவாயு வெப்பத்தை பயன்படுத்துகின்றனர், கிட்டத்தட்ட கால் பகுதியினர் வெப்ப எண்ணெய் பயன்படுத்துகின்றனர்.
பசுமைக் கட்சியைச் சேர்ந்த பொருளாதார மந்திரி ராபர்ட் ஹேபெக் (Robert Habeck), இந்த மசோதா ஜூன் மாதம் நாடாளுமன்றத்திற்கு வர உள்ளது என்று கூறினார்.
2045-க்குள் கார்பன் நியூட்ரல் ஆக வேண்டும் என்ற ஜேர்மனியின் லட்சியத்தின் அவசியமான பகுதி என்று ஹேபெக் கூறினார், மேலும் நாடு பின்தங்கியிருப்பதாக அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ஆனால், ஜேர்மனிக்கு இது ஒரு "அணுகுண்டுக்கு" சமமான நகர்வு என கூறும் வணிக-சார்பு சுதந்திர ஜனநாயக கட்சி (FDP), பொருளாதாரத்தில் அதன் தாக்கம், ஏழைக் குடும்பங்கள் மீது சுமத்தும் சுமை மற்றும் அதைச் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப நடைமுறைகள் பற்றிய கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த மசோதாவை எதிர்க்கட்சியான (கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்) CDU எதிர்ப்பதாக கூறியுள்ளது.
அதே நேரம், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த திட்டத்தை பெரிதும் வரவேற்றுள்ளனர்.