கூட்டத்தினர் மீது பறந்த ராக்கெட்: ஜேர்மனி வீராங்கனை தகுதி நீக்கம்
ஜேர்மனியின் இளம் டென்னிஸ் வீராங்கனை தனது ராக்கெட்டை வீசியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஐடா வோப்கர்
பதின்ம வயதினருக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், ருமேனியாவின் மரியா வாலண்டினா பாப் மற்றும் ஜேர்மனியின் வளர்ந்து வரும் நட்சத்திரமான ஐடா வோப்கர் (Ida Wobker) இருவரும் மோதினர்.
— Cristian (@tennisclips28) July 4, 2026
முதல் சுற்றுப் போட்டியின் முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் ஐடா இழந்தார். அதனால் இரண்டாவது செட்டில் மீண்டு வர போராடினார்.
அப்போது 5-5 என்ற கணக்கில் அவர் இருந்தபோது, அவர் பந்தை கோர்ட்டுக்கு வெளியே அடித்தார். பாப்பின் சர்வீஸ் ஆட்டத்தில் மீண்டு வரப் போராடியதால் விரக்தியடைந்த ஐடா, தனது ராக்கெட்டின் கைப்பிடியை விட்டுவிட்டு, புல் தரையில் அதை அடித்தார்.
தகுதி நீக்கம்
அது வேகமாக கூட்டத்தினரை நோக்கி சென்றது. இதனால், நடுவர் உடனடியாக ஆட்டத்தை நிறுத்தினார்.
பின்னர் மேற்பார்வையாளரை ஆடுகளத்திற்கு அழைத்தார். மேலும், பல நிமிடங்கள் அந்த சம்பவத்தை ஆய்வு செய்த பிறகு, ஆட்டம் 'game, set and match' என நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சாம்பியன்ஷிப் தொடரின் தனது முதல் போட்டியில் இருந்து ஐடா வோப்கர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |