சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு? கருத்து தெரிவித்த ஜேர்மனி
அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி விவகாரம் தொடர்பில் ஜேர்மனி கருத்து தெரிவித்துள்ளது.
ராகுல் காந்திக்கு சிறை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது. மேலும் அரசு மாளிகையை அவர் காலி செய்ய வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியானது.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராகுல் காந்தி குறித்து ஜேர்மனி கருத்து தெரிவித்துள்ளது.
Annalena Baerbock
ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் Annalena Baerbock கூறுகையில், 'எங்களுக்கு தெரிந்தபடி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் நிலையில் ராகுல் காந்தி இருக்கிறார். இந்த தீர்ப்பு நிற்குமா என்பதும், அவரது ஆணை இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு ஏதேனும் அடிப்படை உள்ளதா என்பதும் பின்னர் தெளிவாகிவிடும்.
ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நீதித்துறை சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் சமமாக பொருந்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்' என தெரிவித்துள்ளார்.
@Gonzalo Fuentes/AFP/Getty Images