ஐரோப்பாவின் மிகப்பெரிய இராணுவ சக்தியாக ஜேர்மனி., பிரான்ஸ், பிரித்தானியா அதிர்ச்சி
ஜேர்மனி தனது பாதுகாப்பு செலவுகளை பெரிதும் உயர்த்தி, தற்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய இராணுவ சக்தியாக உருவெடுத்துள்ளது. இதனால் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அதிர்ச்சி அடைந்துள்ளன.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, ஜேர்மனி பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அணு ஆயுதங்களின் மூலம் பாதுகாப்பை வழங்கும் நிலை இருந்தது.
ஆனால், ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு, ஜேர்மனி 100 பில்லியன் யூரோ சிறப்பு நிதி உருவாக்கி தனது இராணுவத்தை வலுப்படுத்தியது.
2024-ஆம் ஆண்டில் ஜேர்மனியின் பாதுகாப்பு செலவு 90.6 பில்லியன் யூரோவாக உயர்ந்தது.

தற்போது, ஜேர்மனி 127 பில்லியன் டொலர் செலவிடுகிறது. இதே நேரத்தில், பிரித்தானியா 84 பில்லியன் டொலர், பிரான்ஸ் 70 பில்லியன் டொலர் மட்டுமே செலவிடுகின்றன.
2029-க்குள் ஜேர்மனி தனது தேசிய வருமானத்தில் 3.5 சதவீதத்தைய பாதுகாப்பிற்காக செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மனி ஏற்கனவே F-35 போர் விமானங்கள், CH-47 ஹெலிகாப்டர்கள், P-8 விமானங்கள், Arrow-3 ஏவுகணைகள் போன்ற அமெரிக்க ஆயுதங்களை வாங்கியுள்ளது.
இதனால் பிரான்ஸ் முன்னெடுத்து வரும் FCAS, Eurodrone, MGCS போன்ற ஐரோப்பிய திட்டங்கள் புறக்கணிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது.
ஜேர்மனியின் வேகமான இராணுவ வளர்ச்சி ஐரோப்பிய சக்தி சமநிலையை சீர்குலைக்கும் என பிரான்ஸ் கவலைப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#GermanyDefense #FranceMilitary #UKDefense #NATO #EuropeanSecurity #MilitaryPower #DefenseSpending #Geopolitics