16 ஆண்டுகள் ஆட்சி செய்த ஜேர்மன் சேன்ஸலரை கௌரவிப்பதற்காக ஜேர்மன் நிறுவனம் செய்துள்ள இனிமையான செயல்
ஜேர்மனியில் 16 ஆண்டுகள் சேன்ஸலராக பதவி வகித்த ஏஞ்சலா மெர்க்கலை கௌரவிக்கும் விதத்தில், இனிப்பு ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளது இனிப்புகள் தயாரிக்கும் பிரபல ஜேர்மன் நிறுவனம் ஒன்று.
ஏஞ்சலா இந்த மாதத்துடன் தனது பதவியிலிருந்து விடைபெறும் நிலையில், அவரது ரசிகர்களுக்கு இனிப்பு ஒன்றை வழங்கி அவருக்கு விடைகொடுக்க முடிவு செய்துள்ளது பவேரியாவிலுள்ள Odenwaelder Marzipan என்ற இனிப்புகள் தயாரிக்கும் நிறுவனம்
ஏஞ்சலாவின் முகத்தைப் போல தயாரிக்கப்படும் இந்த இனிப்புகள் இரண்டு வருடம் வரை கெடாமல் இருக்குமாம். அவர் பதவியிலிருந்து விலகிய பிறகும் இரண்டு ஆண்டுகளுக்கு மக்கள் அவரது உருவிலான இனிப்புகளை தங்கள் வீட்டில் வைத்திருப்பதன் மூலம் அவரை நினைவுகூர முடியும் என்கிறார் Odenwaelder Marzipan நிறுவன மேலாளரான Thomas Zuber.
எட்டு கட்டங்களாக செய்யப்படும் இந்த இனிப்பை தயாரிக்க, எட்டு பேர் கொண்ட ஒரு குழுவுக்கு இரண்டு நாட்கள் ஆகுமாம்!