சிவப்புக் கோட்டை தாண்ட ஜேர்மனி விரும்பவில்லை: ஜேர்மன் அமைச்சர் தெரிவித்துள்ளதன் பின்னணி
ஜேர்மனியின் பொருளாதாரத்துறை மற்றும் ஆற்றல் துறை அமைச்சரும், ஜேர்மன் துணை சேன்ஸாருமான Robert Habeck, சிவப்புக் கோட்டைத் தாண்ட ஜேர்மனி விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அமைச்சர் கூறியதன் பொருள் என்ன?
உக்ரைன் ரஷ்யப் போரில், உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் பல உதவிவருகின்றன. இந்நிலையில், தற்போது உக்ரைனுக்கு போர் வீரர்களை அனுப்புவது குறித்த ஒரு பேச்சு எழுந்துள்ளது.
ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கவே தயங்கியது. அப்படிச் செய்தால் நேரடியாக ரஷ்யாவுடன் மோதுவது போலாகிவிடும், புடினுடைய கோபத்தை சம்பாதிக்கவேண்டியிருக்கும் என பெரிதும் தயக்கம் காட்டியது ஜேர்மனி.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், உக்ரைனுக்கு போர் வீரர்களை அனுப்புவதைக் குறித்துதான் ஜேர்மனியின் பொருளாதாரத்துறை மற்றும் ஆற்றல் துறை அமைச்சரான Robert Habeck இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மன் போர் வீரர்களை உக்ரைனுக்கு அனுப்புவது என்பது சிவப்புக் கோடு. அதை ஜேர்மனி தாண்டாது என்று கூறியுள்ளார் அவர்.
நாம் இந்தப் போரில் ஒரு பாகமாக மாறிவிடக்கூடாது என்று கூறியுள்ள Habeck, நாம் குறிப்பிட்ட அளவுக்கு விலகியே இருப்பது முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.