18 வயது மகளை கொன்றுவிட்டு... தற்கொலைக்கு முயன்ற ஜெர்மனியில் இருந்து கோவா வந்த தாய்
இந்தியாவின் கோவா மாநிலத்தை சேர்ந்த நிமிஷா வல்சன் என்ற பெண் தனது 18 வயது மகளை கொன்று விட்டு தானும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் சில ஆண்டுகளாக வசித்து வந்த நிமிஷா வல்சன் என்ற பெண் தனது மகளுடன், இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு கடந்த வாரம் வந்துள்ளார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நிமிஷா வல்சன் தனது 18 வயது மகளை கொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நிமிஷா வல்சன் அருகில் உள்ள விட்டிற்கு சென்று அவர்களிடன் கார் சாவியைப் பெற்றுக் கொண்டு வீட்டிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள ஆற்றுப் பாலத்திற்கு சென்றுள்ளார்.
பிறகு அந்த பாலத்தில் இருந்து ஜூவாரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
நிமிஷா வல்சனின் தற்கொலை முயற்சியை பார்த்த மற்றொரு பாலத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கூடுதல் செய்திகளுக்கு: சீனா தைவான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: மூத்த ராணுவ அதிகாரி திடீர் மரணம்
இந்தநிலையில் அவர்மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.