குடல் புழுக்களை உங்களை தொந்தரவு செய்யுதா? இதனை அகற்ற இதோ சில வழிமுறைகள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் குடல் புழு தொல்லையும் ஒன்றாகும்.
இவை நாம் குடிக்கும் நீர் முதல் உணவு வரை கண்ணுக்குதெரியாமல் புழுக்கள் குடலுக்குள் சென்றுவிடுகிறது. கைகளை சுத்தம் செய்யாமல் சாப்பிடு போதும், அசுத்தமான தண்ணீரை குடிக்கும் போதும், சுகாதாரமில்லாத உணவை சாப்பிடும் போதும், அரை வேக்காட்டு உணவை சாப்பிடும் போதும் என பல்வேறு காரணங்களால் குடலில் புழுக்கள் வசிக்கிறது.
இவை அதிகமாகிவிட்டால் உடலில் பல்வேறு பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.
எனவே இவற்றை ஆரம்பத்திலே விரட்டுவது நல்லது. அந்தவகையில் தற்போது குடல் புழுவை விரட்ட என்ன மாதிரியாக வழிகளை பின்பற்றலாம் என்பதை பார்ப்போம்.
- வாரத்திற்கு ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்க்க வேண்டும். அதுவும் அந்த பாகற்காயை குழம்பாகவோ, பொரியலாவோ அல்லது வேறு எந்த வகையிலும் தயாரித்து சாப்பிடலாம். இப்படி உட்கொண்டு வந்தால், குடல் புழுக்கள் அழிவதோடு, உடலில் புழுக்கள் சேராமலும் இருக்கும்.
- குடல் புழுக்களை அழிக்கும் மற்றொரு அற்புதமான கசப்புத்தன்மை கொண்ட காய்கறி தான் சுண்டக்காய். இதனை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
- உங்கள் உடலில் உள்ள புழுக்களை அழிக்க நினைத்தால், அன்னாசிப் பழத்தை சாப்பிடுங்கள் போதும்.
- ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை வெதுவெதுப்பான பாலில் சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் வயிறு நன்கு கலக்கிவிட்டு, குடல் முழுவதும் சுத்தமாகிவிடும்.
- 2-3 பல் பூண்டை தட்டி பாலில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, பூண்டுடன் பாலை உட்கொள்ள வேண்டும். அதுவும் இந்த பாலை காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இப்படி 2-3 நாட்கள் காலை வேளையில் குடித்து வந்தால், குடலில் உள்ள புழுக்கள் முழுவதுமாக அழிந்துவிடும்.
- நல்ல கொளுந்து வேப்பிலையை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து 2 நாட்கள் உட்கொண்டு வந்தாங்ல, குடல் புழுக்கள் முழுவதுமாக அழிந்துவிடும்.
- பப்பாளியில் உள்ள விதைகளை உலர வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதன் மூலம் வயிற்றுப்புழுக்கள் அழிக்கப்படும்.
- ஒரு டேபிள் ஸ்பூன் ஓம விதைகளை ஒரு லிட்டர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, சிறிது நேரம் மூடி வைத்து, பின் அந்நீரை வடிகட்டி, நாள் முழுவதும் குடிக்க வேண்டும். இப்படி செய்தால், குடல் புழுக்கள் அழிவதோடு, செரிமானமும் சிறப்பாக இருக்கும்.