லண்டன் விமான நிலையத்தில் தனது சூட்கேசை தேடி அலையும் ஆவி: ஒரு திகில் செய்தி
லண்டன் விமான நிலையம் ஒன்றில், தனது சூட்கேசைத் தேடி அலையும் ஒரு ஆவியைக் குறித்த திகில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
தீப்பற்றி எரிந்த பயணிகள் விமானம்
1948ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில், பனிமூட்டம் நிறைந்த ஒரு நாளில், அப்போது லண்டன் விமான நிலையம் என அழைக்கப்பட்ட, இன்றைய ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.
அந்த விபத்தில் 19 பேர் உயிருடன் எரிந்து பலியானார்கள். மூன்று பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டார்கள்.
தனது சூட்கேசைத் தேடி அலைந்த பயணி
தரையிறங்க இருக்கும் விமானத்தில் பிரச்சினை என விமானி தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவலளித்ததைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையினர் தங்கள் வாகனங்களுடனும், மருத்துவ உதவிக்குழுவினர் ஆம்புலன்ஸ்களுடனும் விமான நிலையத்தில் காத்திருக்க, விழுந்து நொறுங்கி தீப்பற்றிய விமானத்திலிருந்தவர்களைக் காப்பாற்ற கடுமையான பனி பெரும் இடைஞ்சலாக இருந்துள்ளது.
அந்த நேரத்தில் தனது சூட்கேசைத் தேடி அலையும் பயணி ஒருவரைக் கண்டுள்ளார்கள் மீட்புக் குழுவினர். எனது சூட்கேசை பார்த்தீர்களா என அவர் அவர்களிடம் கேட்டுள்ளார்.
பிறகுதான் தெரிந்துள்ளது, ஏற்கனவே உயிரிழந்தவர்களின் பட்டியலில் அந்த பயணியின் பெயரும் இருந்தது என்பது.
அந்த நாள் முதல் பலர் அந்த விமான ஓடுபாதையில் இந்த பயணியைப் பார்த்துள்ளார்களாம். சொல்லப்போனால், 1970ஆம் ஆண்டு, ஒருமுறை விமானம் ஒன்றின் ரேடாரில் யாரோ ஓடுபாதையில் நடமாடிக்கொண்டிருப்பது தெரியவரவே, பொலிசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவலளிக்கப்பட, அவர்கள் ஓடுபாதைக்கு விரைய, அங்கே யாரையும் காணவில்லையாம்.
ஆக, ஆவிகள் நடமாட்டம் குறித்து ஆராய்வோர், இன்றும் அந்த விமான நிலையத்தில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக நம்புகிறார்கள்.