ஒரு வாரம் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி ஜூஸ் குடிங்க! இந்த நன்மைகள் உங்களை வந்து சேரும்
நாம் தினமும் சமையலறையில் பயன்படுத்தும் ஓர் மருத்துவ குணம் நிறைந்த பொருள் தான் இஞ்சி.
இந்த இஞ்சி பல ஆண்டுகளாக இயற்கை வைத்தியத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற பல ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது.
அதிலும் இதன் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ஜூஸ் தயாரிப்பது எப்படி?
மிக்சர் ஜாரில் இஞ்சி துண்டுகளை போட்டு அரைத்து, அதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாறு, சுவைக்கேற்ப தேன் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்தால், இஞ்சி ஜூஸ் தயார்.
Image - pinterest
நன்மைகள்
- கர்ப்பிணிப் பெண்கள் காலையில் குமட்டல் உணர்வை அதிகம் சந்திப்பவராயின், இந்த இஞ்சி ஜூஸைக் குடிக்கலாம். இது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது மற்றும் பாதுகாப்பானதும் கூட.
- உங்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக வயிற்று வலி ஏற்படுமானால், இந்த இஞ்சி ஜூஸை தினமும் குடியுங்கள்.
- ஆர்த்ரிடிஸ் நோயாளிகள் சந்திக்கும் கடுமையான மூட்டு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் அடிக்கடி தலைவலியை சந்திப்பவர்களுக்கும் இந்த இஞ்சி ஜூஸ் நல்லது.
- தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள். இது உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி ஜூஸை குடித்து வந்தால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, உடலின் மெட்டபாலிசமும் மேம்படும்.
- சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி ஜூஸை குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.