பிரித்தானியாவில் நள்ளிரவில் 15 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்! தீவிர விசாரணையில் பொலிஸார்
பிரித்தானியாவில் 15 வயது சிறுமியை, சிறுவர்கள் இரண்டு பேர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பெருநகர பகுதியில் உள்ள Horwich கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்துள்ளது.
சம்பவத்தன்று Chorley New Road சாலையில் இரவு 11.50 மணியளவில் பொலிஸார் அழைக்கப்பட்டனர். அங்கு 15 வயது சிறுமி வயிற்றில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்துள்ளார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை அடையாளம் தெரியாத பதின்ம வயது சிறுவர்களை இருவர் அணுகியுள்ளனர், பின்னர் இருவரும் சேர்ந்து அவறது வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளனர்.
ஆனால் அப்பெண்ணுக்கு காயங்கள் ஆழமில்லாமல் இருப்பதனால், சந்தேகநபர்களின் இலக்கு அப்பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை என கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் இது திட்டமிட்ட செயலாக தோன்றவில்லை என்று கூறியுள்ளனர்.
Chorley New Road, Horwich - Image: KBP
பொலிஸார் தற்போய்து அந்த இரண்டு சிறுவர்களையும் தேடிவரும், நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், துப்பறிவாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் அந்த பகுதியில் இருந்த மற்றும் தகவல் தெரிந்தவர்கள் யாரேனும் முன் வந்து உதவுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏற்கெனவே பிரித்தானியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவருவதாக சர்ச்சை நீடிக்கும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.