படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை... மருத்துவர்கள் கண்ட அதிரவைக்கும் காட்சி
ஹொங்ஹொங்கில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பிஞ்சு உடலில் 130 காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.
Chen Ruilin என்ற அந்த ஐந்து வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனாள்.
வருடக்கணக்காக சித்திரவதை செய்யப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை இழந்துபோயிருந்த அந்த குழந்தை, பாக்டீரிய தொற்று ஒன்று உருவானபோது அவளது உடலால் அந்த தொற்றை எதிர்த்து போரிடமுடியாததால், அவள் இறந்துபோனது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.
அந்த குழந்தையின் உடலில், கத்திரியால் குத்தப்பட்ட மற்றும் பிரம்பால் அடிக்கப்பட்ட காயங்கள் ஏராளம் இருந்துள்ளன. ஒரு கட்டத்தில், தனது மன வேதனையை வெளிப்படுத்தும் வகையில், தரையெல்லாம் இரத்தமாக கிடக்கும் தன் வீட்டை, சுவர் ஒன்றில் படமாக வரைந்துள்ளாள் அந்த பிஞ்சுக் குழந்தை.
இவ்வளவுக்கும் காரணம், அந்த குழந்தையின் மாற்றாந்தாய் Huang Xiaotong (30)! குழந்தையை அடித்து, பட்டினி போட்டு, வீட்டின் மேல் தளத்தில் தூக்கி வீசியிருக்கிறார்கள்.
இந்த கொடுமைகளுக்கு, அந்த குழந்தையின் தந்தையான Chen Haiping (29)ம், Huangஇன் தாயும் துணைபோயிருக்கிறார்கள். மற்ற குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களின் சாட்சியங்களைத் தோடர்ந்து, அவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இம்மாதம் 20ஆம் திகதி அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தையின் எட்டு வயது அண்ணனும் சித்திரவதை செய்யப்பட்ட நிலையில், அவன் தற்போது தன் தந்தை வழி பாட்டியின் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறான்.