கல்வித்துறைக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் 6 வயது சிறுமிக்கு வெற்றி! பிரபல நாட்டில் நடத்த ஆச்சரியமூட்டும் சம்பவம்
எகிப்தில் 6 வயது சிறுமி ஒருவர் அந்நாட்டின் கல்வி அமைச்சகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தில் Wadi El Natroun பகுதியில் வசித்த 6 வயது சிறுமி, அதே பகுதியில் துக்ள ஒரு பள்ளியில் முதலாம் வகுப்பை படித்து முடித்தார். அதன்பிறகு, அவரது தந்தையின் பணி காரணமாக குடும்பத்துடன் Abu al-Matamir எனும் இடத்திற்கு குடியேறியுள்ளனர்.
இதனையடுத்து, அவரை இரண்டாம் வகுப்பில் சேர்க்க அவரது தந்தை அங்கிருக்கும் அரசு பள்ளிக்கு இடம் கேட்டு சென்றுள்ளார்.
அனால், அந்த பள்ளியின் முதலவர், சிறுமிக்கு இன்னும் 2-ஆம் வகுப்பில் படிக்கக்கூடிய வயது ஆகவில்லை, வேண்டுமென்றால் இந்த பள்ளியில் மீண்டும் முதல் வகுப்பில் படிக்குமாறு கூறியுள்ளார். அப்படி இல்லையென்றால், Wadi El Natroun பள்ளிக்கே தினமும் சென்று வருமாறு கூறி அனுப்பியுள்ளார்.
ஒரு வருடம் கடந்த நிலையில், சிறுமி எகிப்திய கல்வி அமைச்சகத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, "நான் நன்றாக படிப்பேன் மற்றும் வகுப்பில் நான் சிறந்த மாணவியும் கூட., என்னால் நன்றாக வரையவும் முடியும்" என்று கூறி, அவர் வரைந்த சில படங்களையும் நீதிபதியிடம் காண்பித்துள்ளார். பிறகு பள்ளியில் நடந்தவற்றையும் கூறி தனக்கான நியாயத்தை கேட்டுள்ளார்.
அப்போது, நீதிபதி அந்தச் சிறுமியிடம், பள்ளியை இரண்டாம் வகுப்பில் சேர்க்கும்படி புகார் செய்ய ஒரு வருடம் முழுவதும் காத்திருக்க என்ன காரணம்? என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர் "வழக்குச் செலவுகளை என் தந்தை மீது சுமத்த நான் விரும்பவில்லை, அவர் அதிக பணம் சம்பாதிக்காத விவசாயி. நான் ஆண்டு முழுவதும் 100 எகிப்திய பவுண்டுகளை சேமித்தேன், அதை நீதிமன்ற கட்டணத்திற்கு பயன்படுத்தினேன்" என்று கூறினார்.
அவரது வழக்கு விசாரணைக்குப் பிறகு, கல்வி அமைச்சகம் சிறுமிக்கு 3,000 எகிப்திய பவுண்ட் பணத்தை தார்மீக இழப்பீடாக வழங்கவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.