மக்கள் கூடியிருந்த இடத்தில் லட்சக்கணக்கில் கொள்ளையடித்த 17 வயது மாணவி! நபரின் நொடிபொழுது சாதுர்யமான செயலால் சிக்கினார்
தாய்லாந்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த இடத்தில் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து கொண்டு ஓடிய 17 வயது சிறுமி அங்கிருந்த நபர் ஒருவரின் சாதுர்யமான செயலால் பொலிசில் சிக்கியுள்ளார்.
தாய்லாந்தின் நொந்தபுரி மாகாணத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இந்த திக் திக் சம்பவம் நடந்துள்ளது. 17 வயதான மாணவி ஒருவர் அங்குள்ள நகைக்கடைக்கு வந்து அங்கிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டியவாறு ஒரு கடிதத்தை கொடுத்தார்.
அதில், சத்தம் போடாமல் இந்த பையில் நகைகள் மற்றும் பணத்தை போடு, உன் உயிர் உன் கையில் என எழுதியிருந்தது. இதையடுத்து பணம் மட்டும் நகைகளை மாணவி பையில் அவர் போட்டார்.
அதன் மதிப்பு 400,000 baht (ரூ 24,22,289.14) ஆகும், பின்னர் மாணவி அங்கிருந்து வேகமாக ஓட தொடங்கிய நிலையில் கடையின் மேலாளர் உதவி கேட்டு கத்தினார்.
அப்போது அங்கிருந்த் நபர் ஒருவர் ஓடி வந்த மாணவி முன்னர் தனது காலை நீட்டியதால் மாணவி கீழே விழுந்தார். பின்னர் மக்கள் அங்கு கூடியதும் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்து மாணவியை கைது செய்தனர்.
விசாரணையில் ஓன்லைன் முதலீட்டில் பெரும் பணத்தை மாணவி இழந்தது தெரியவந்தது. அது குடும்பத்தாருக்கு தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என கருதி இப்படி பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரிந்தது.
இதனிடையில் அந்த மாணவி பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.