ஆசிய தோற்றம் கொண்டவர்! லண்டன் பேருந்தில் இளம்பெண்ணிற்கு நேர்ந்த சம்பவம் குறித்து முக்கிய தகவல்
லண்டன் பேருந்தில் இளம்பெண்ணிற்கு நேர்ந்த மோசமான சம்பவம் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
தென்கிழக்கு லண்டனில் உள்ள Woolwichல் இருந்து Bexleyheath செல்லும் பேருந்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் திகதி இளம்பெண்ணொருவர் பயணம் செய்தார்.
அப்போது அப்பெண் அருகே வந்து உட்கார்ந்த இளைஞர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்தார், பின்னர் அவர் மீது கை வைத்து தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பில் தற்போது பொலிசார் நபர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அவரிடம் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் வயது 18ல் இருந்து 25 வரை இருக்கும் எனவும் ஆசிய தோற்றம் கொண்டவர் அவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.