பிரித்தனியா பள்ளியில் சுருண்ட விழுந்த 11 வயது மாணவி மாரடைப்பால் மரணம்: என்ன காரணம்?
பிரித்தானியாவில் வகுப்பாறையில் சுருண்ட விழுந்த மாணவி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பம் ஒட்டுமொத்த பள்ளியையும் துக்கத்தில் மூழ்கடித்துள்ளது.
லீசெஸ்டரின் Highfields உள்ள Moat Community கல்லூரியிலே இத்துயர சம்பவம் நடந்துள்ளது.
காலை 11:30 மணிக்கு திடீரென சுருண்ட விழுந்த 11 வயது மாணவி, சில நிமிடங்களில் உயிரிழந்ததாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1000 மாணவர்கள் பயிலும் பள்ளியின் முதல்வர் பிரையன் கில்லீன் கூறியதாவது, Moat Community கல்லூரியில் இருக்கும் அனைவரும் இந்த துயரமான சம்பவத்தில் அதிர்ச்சியடைந்துள்ளோம்.
வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் நாங்கள் எங்கள் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம்.
நகர சபை பயிற்சி பெற்ற ஆலோசகர்களை அனுப்பியுள்ளது, அவர்கள் பள்ளியில் இருந்த படி தேவைப்படுவோருக்கு உதவி வருகின்றனர்.
இந்த துயர நிகழ்வுக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெரியவில்லை, எனவே இந்த கட்டத்தில் மேலும் கருத்து தெரிவிப்பது சரியானதாக இருக்காது என பள்ளியின் முதல்வர் பிரையன் கில்லீன் கூறியுள்ளார்.
சிறுமியின் மரணம் சந்தேகத்திற்கிடமானதாக கருதப்படுவதில்லை என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.