பெரு நிறுவன CEO-க்களை விட அதிகமாக சம்பாதிக்கும் கல்லூரி மாணவி: அவரது தொழில்?

Money
By Arbin Nov 01, 2025 12:57 AM GMT
Report

வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என கனவு காண்பது எளிது, ஆனால் அதை அடைவதற்கு நிறைய முயற்சி மற்றும் தியாகம் தேவை.

சாதிக்க வேண்டும்

வெகு சிலர் மட்டுமே அப்படியான கனவுகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றி சாதித்துள்ளனர். அப்படியான ஒருவரின் கதை மில்லியன் கணக்கானோரை ஊக்குவிக்கும் என்பது உறுதி.

பெரு நிறுவன CEO-க்களை விட அதிகமாக சம்பாதிக்கும் கல்லூரி மாணவி: அவரது தொழில்? | Girl Earns More Than Corporate Ceos

லக்னோவைச் சேர்ந்த அனுஷ்கா ஜெய்ஸ்வால், விவசாயத்தின் மீதான தனது ஆர்வத்தைத் தொடர கல்லூரி வேலைவாய்ப்புகளை எவ்வித தயக்கமும் இன்றி நிராகரித்தார்.

டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு, கல்லூரி வேலைவாய்ப்பு பருவத்தில், அவர் ஒரு நல்ல வேலையைப் பெறுவார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில், தேடி வந்த ஒரு வாய்ப்பையும் அவர் ஏற்கவில்லை.

2000 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்டிலிருந்து வந்த பெண்ணால் பரபரப்பு: உண்மை என்ன?

2000 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்டிலிருந்து வந்த பெண்ணால் பரபரப்பு: உண்மை என்ன?

தற்போது 29 வயதான அந்த இளம்பெண்ணின் குறிக்கோள், அடிமட்ட அளவில் பெரிய அளவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதே. பொழுதுபோக்காக மொட்டை மாடியில் தக்காளி உட்பட சில செடிகளை வளர்த்த அவருக்கு, திடீரென்று அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.

விவசாயத்தை தனது தொழிலாக்க வேண்டும் என முடிவு செய்த அவர், தோட்டக்கலை விவசாயத்தை ரசிக்கத் தொடங்கினார். இன்று, அவர் ஆண்டுதோறும் சுமார் ரூ.1 கோடி சம்பாதிக்கிறார்.

பெரு நிறுவன CEO-க்களை விட அதிகமாக சம்பாதிக்கும் கல்லூரி மாணவி: அவரது தொழில்? | Girl Earns More Than Corporate Ceos

இந்தியாவில் பெரு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளின் சராசரி ஆண்டு சம்பளம் ரூ 31.4 லட்சம் என்றே இருந்து வருகிறது. குறிப்பிட்ட சில நிறுவனங்களில் மட்டுமே ஆண்டுக்கு ரூ 10 கோடி வரையில் சம்பளம் அளிக்கின்றனர்.

ரூ 1 கோடி சம்பாதிக்கிறார்

ஆனால் அனுஷ்காவின் கதை அதுவல்ல, தமக்கு மிகவும் பிடித்தமான வேலையில், எந்த மன அழுத்திற்கும் இடமின்றி, ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பாதிக்கிறார்.

பெரு நிறுவன CEO-க்களை விட அதிகமாக சம்பாதிக்கும் கல்லூரி மாணவி: அவரது தொழில்? | Girl Earns More Than Corporate Ceos

ஒரு நாள் மாலை வேளை, அனுஷ்கா தனது விருப்பத்தை தனது சகோதரருடன் பகிர்ந்து கொண்டார். அவர் அவளை ஊக்குவித்து, தனது கனவைத் தொடரச் சொன்னார். இதனையடுத்து நொய்டாவில் உள்ள தோட்டக்கலை தொழில்நுட்ப கல்லூரியில் தோட்டக்கலை படிப்பைத் தொடர்ந்தார்.

தனது படிப்பு மற்றும் விவசாயம் தொடர்பான பிற கூடுதல் படிப்புகளை முடித்த பிறகு, அனுஷ்கா 2020 ஆம் ஆண்டில் ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு பாலிஹவுஸ் பண்ணையைத் தொடங்கினார்.

பெரு நிறுவன CEO-க்களை விட அதிகமாக சம்பாதிக்கும் கல்லூரி மாணவி: அவரது தொழில்? | Girl Earns More Than Corporate Ceos

தற்போது அவர் லக்னோ மக்களுக்கு சிறப்பு காய்கறிகளை வழங்கி ஒரு நற்பெயரைப் பெற்று வருகிறார். 24 வயதில் ஆங்கில வெள்ளரிகளை வளர்க்கத் தொடங்கினார். தனது முதல் அறுவடையிலேயே 51 டன் மகசூலைப் பெற்றார்.

இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டு... அரண்மனையில் இருந்து வெளியேற்றப்படும் ஆண்ட்ரூ

இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டு... அரண்மனையில் இருந்து வெளியேற்றப்படும் ஆண்ட்ரூ

தனது ஆரம்ப வெற்றியால் ஊக்கமடைந்த அவர், மற்ற காய்கறிகளையும் வளர்க்கத் தொடங்கினார். இன்று, அவர் ஒவ்வொரு ஆண்டும் 200 டன்களுக்கு மேல் குடை மிளகாய்களை உற்பத்தி செய்கிறார்.

இன்று, அனுஷ்கா தனது விவசாயத்தை விரிவுபடுத்தி 6 ஏக்கர் நிலத்தில் காய்கறிகளை பயிரிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

20 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US