வெளிநாட்டில் மொத்த குடும்பமும் பீதியில்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் நெருக்கடியில் இளம் பெண்
எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம் அல்லது துஸ்பிரயோகத்திற்கு இலக்காகலாம் என்ற நிலையில் இருந்து பிரித்தானியாவில் தஞ்சமடைந்த சிறுமி ஒருவர் தற்போது நாடு கடத்தப்படும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறார்.
புகலிடக் கோரிக்கை
14 வயதில் பிரித்தானியாவில் தஞ்சமடைந்த சூடான் நாட்டவரான ஆன் பஷீர், இங்கேயே பாடசாலை படிப்பை முடித்துவிட்டு, தற்போது GCSE பயின்று வருகிறார். இந்த நிலையில் தான், அவர்களின் சொந்த நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தலான சூழல் தற்போது இல்லை என குறிப்பிட்டு, அவர்களின் புகலிடக் கோரிக்கையை உள்விவகாரத்துறை நிராகரித்துள்ளது.
Picture: SWNS
தற்போது 16 வயதாகும் ஆன் பஷீர் தெரிவிக்கையில், 2018 முதலே பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் சூடானில் இருந்தது எனவும், எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம், துஸ்பிரயோகத்திற்கு இரையாகலாம் அல்லது வலுக்கட்டாயமாக கைது செய்யப்படலாம் என்ற நெருக்கடியிலேயே வாழ்ந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்திற்காகவும் எங்களுக்கான நீதிக்காகவும் நாங்கள் போராடியதில் ஒருபோதும் வருத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2019ல் அரசாங்கத்திற்கு எதிராக மூண்ட போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக ஆன் பஷீரின் தாயாரும் சகோதரியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
தற்கொலைக்கு ஒப்பானது
அதன் பின்னர் ரகசியமாக சூடானில் இருந்து தப்பியது ஆன் பஷீர் குடும்பம். இந்த நிலையில் மீண்டும் சூடான் திரும்ப நேர்ந்தால், அது தற்கொலைக்கு ஒப்பானது என்கிறது இந்த குடும்பம்.
மேலும், புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர், இரண்டு ஆண்டு காலம் பிரித்தானிய அதிகாரிகளால் ஒவ்வொரு குடியிருப்பாக மாறும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். இதனால் லண்டனில் இருந்து பிரைட்டனுக்கு தினமும் பள்ளிக்கு செல்லும் நிலைக்கு ஆன் பஷீர் தள்ளப்பட்டார்.
@AP
தற்போது ஆன் பஷீர் GCSE இறுதி ஆண்டு பயின்று வருகிறார். அவரது கல்வியை பூர்த்தி செய்ய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என அந்த குடும்பம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆன் பஷீரின் சகோதரி Enji சூடானில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதற்காக 33 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
இதனிடையே, சட்டத்திற்கு புறம்பாக எவருக்கும் புகலிடம் அளிக்க முடியாது என உள்விவகார அமைச்சகம் உறுதியாக தெரிவித்துள்ளது.