தந்தையின் கண் முன்னே இளம்பெண்ணை சூழ்ந்து நின்று சவுக்கால் அடிக்கும் ஆண்கள்: திடுக் வீடியோவின் பின்னணி
நைஜீரியாவில், இளம்பெண் ஒருவரை நான்கு ஆண்கள் சூழ்ந்து நின்றுகொண்டு சவுக்கால் அடிக்கும் பயங்கர வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதுவும், அந்த பெண்ணின் தந்தையே அவளை அடிக்கச் சொன்னாராம்.
காரணம் என்னவென்றால், அவர் வீடியோ ஒன்றில் தன் மகளும் சில ஆண் மற்றும் பெண் நண்பர்களும் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் மதுபானம் குடிக்கும் வீடியோ ஒன்றைப் பார்த்துள்ளார்.
வீடியோவை காண
ஆனால், அது மதுபானம் அல்ல என்று அந்த பெண் கூறியுள்ளாள்.
ஆனால், அவளை அவளது பள்ளிக்கு அழைத்துவந்த அந்த தந்தை, ஆசிரியர்களிடம் தன் மகள் மதுபானம் அருந்தியதாக கூறி, தக்க தண்டனையளிக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த பள்ளி ஒரு இஸ்லாமிய பள்ளி. ஆகவே, அந்த ஆசிரியர்கள் அந்த மாணவி இஸ்லாமிய விதிகளின்படி சவுக்கால் அடித்துள்ளார்கள். அடி தாங்காமல் அந்த பெண் தன் மீது விழும் அடியை தடுக்க முயல்வதையும், அந்த அடிகளுக்கு மத்தியிலும், அவிழ்ந்துவிழும் தன் ஹிஜாபை சரி செய்வதையும் வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
அந்த பெண்ணை ஆசிரியர்கள் அடிக்கும் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள உள்ளூர் அரசாங்கம், அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.