சிறுமியைக் கடத்திக் கொன்ற பெண்: பொலிசார் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் எடுத்த முடிவு
மெக்சிகோ நாட்டில், சிறுமி ஒருத்தியைக் கடத்திக் கொலை செய்த பெண் ஒருவரை பொதுமக்களே அடித்துக் கொன்றார்கள்.
மாயமான சிறுமி
கடந்த புதன்கிழமையன்று, மெக்சிகோவிலுள்ள Taxco என்னுமிடத்தில் தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்த கமிலா (Camila Gomez, 8) என்னும் சிறுமி மாயமானாள்.
விளையாடச் சென்ற மகள் வீடு திரும்பாததால் அவளது தாய் கவலையடைந்திருந்த நேரத்தில், கமிலாவைக் கடத்திவைத்திருப்பதாகக் கூறி சிலர் பணம் கேட்டு மிரட்ட, பொலிசாரிடம் புகாரளித்துள்ளார் அவர்.
ஆனால், பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
கமெராவில் சிக்கிய காட்சி
இதற்கிடையில், குழந்தையைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண், மற்றொருவருடன் இணைந்து சாக்குமூட்டை ஒன்றை காருக்குள் போட்டுக்கொண்டு செல்லும் காட்சிகள் கிடைத்துள்ளன.
பின்னர், கமிலாவின் உயிரற்ற உடல் Taxco நகரில் சாலையோரமாக கண்டெடுக்கப்பட்டது.
பிள்ளை கொல்லப்பட்டும் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பிள்ளையைக் கடத்திய பெண்ணின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.
தகவலறிந்த பொலிசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து அந்தப் பெண்ணையும், அவருடனிருந்த இரண்டு ஆண்களையும் காரில் ஏற்றியுள்ளனர்.
ஆனாலும் விடாத மக்கள், பொலிஸ் காரை சுற்றிவளைத்து அந்தப் பெண்ணையும், ஆண்களையும் காரிலிருந்து வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த அந்த பெண், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டார். அந்த ஆண்கள் உயிர் பிழைத்துவிட்டார்கள்.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமையன்று மக்கள் கூடி கமிலாவுக்கு இறுதிச்சடங்கு செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |