தன்னை பிணைக்கைதியாக வைத்திருந்த ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவரை நேருக்கு நேர் நின்று முறைத்த இளம்பெண்
தன்னை தன் நாட்டிலிருந்து பிடித்துச் சென்று பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் ஒருவரை, இஸ்ரேல் இளம்பெண் ஒருவர் முறைத்துப் பார்க்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
நேருக்கு நேர் நின்று முறைத்த இளம்பெண்
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த 260 பேரை சுட்டுக்கொன்றதுடன், 240 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
கத்தார் முதலான சில நாடுகளில் தலையீட்டைத் தொடர்ந்து தற்போது பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி விடுவிக்கப்பட்டவர்களில் ரிமோன் (Rimon Kirsht, 36) என்னும் இளம்பெண்ணும் ஒருவர்.
ரிமோனுடன் ஐந்து இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.
தான் விடுவிக்கப்பட்டதும், ரிமோன், தன்னை இதுவரை பிணைக்கைதியாக வைத்திருந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் ஒருவரை நேருக்கு நேராக நின்று முறைத்துப்பார்க்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
That look Rimon Kirsht gave the Hamas terrorist. pic.twitter.com/H2MkPDOjJe
— Eli Kowaz (@elikowaz) November 28, 2023
தைரியமாக நின்று, அந்த ஹமாஸ் தீவிரவாதியை நேருக்கு நேராக முறைத்துவிட்டு, பிறகு அமைதியாக அங்கிருந்து நகர்ந்துள்ளார் ரிமோன்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |