உலகளவில் 4 மில்லியனை கடந்த மரணங்கள்! அதிரவைக்கும் புதிய தகவல்கள்
உலகளவில் வியாழக்கிழமையன்று கொரோனா தொற்று தொடர்பான மரணங்கள் 4 மில்லியனை கடந்தன. ஆனால், இன்னும் பல நாடுகள் தங்கள் மக்கள்தொகைக்கு போதுமான தடுப்பூசிகளை வாங்க போராடுகின்றன.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் புதிய தொற்று எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், இந்தியாவில் கண்டறியப்பட்ட 'டெல்டா' வகை கொரோனா வைரஸ் உலகெங்கிலும் ஆதிக்கம் செலுத்துவதால் பல நாடுகளுக்கு தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையின் பகுப்பாய்வின்படி, COVID-19 இறப்பு எண்ணிக்கை 2 மில்லியனை எட்ட ஒரு வருடம் ஆனது, அடுத்த 2 மில்லியன் மரணங்கள் வெறும் 166 நாட்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிக இறப்பு எண்ணிக்கையில் முதல் 5 இடங்களில் இருக்கும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் மெக்ஸிகோ மொத்த உலகில் நிகழும் இறப்புகளில் 50 சதவீதத்தை குறிக்கின்றன.
அதே நேரத்தில் பெரு, ஹங்கேரி, போஸ்னியா, செக் குடியரசு மற்றும் ஜிப்ரால்டர் ஆகிய நாடுகள் அதன் மக்கள்தொகையின் அடிப்படையில் அதிக இறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளன.
ராய்ட்டர்ஸ் பகுப்பாய்வின்படி, ஒவ்வொரு நாளும் உலகளவில் பதிவான ஒவ்வொரு மூன்று இறப்புகளில் ஒன்று இந்தியாவில் உள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த மாதம் இறப்புக்கள் மிக அதிகமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ள நிலையில், அதிகாரப்பூரவ இறப்பு எண்ணிக்கை உலகளவில் கணக்கிடப்பட வேண்டும் என்று பல சுகாதார வல்லுநர்கள் நம்புகின்றனர்.
இந்தியாவின் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட கணிசமாக அதிகமாக உள்ளது என்ற கூறப்படுகிறது.
தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக ஏழை நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி போட போராடி வருவதால், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த செல்வந்த நாடுகள் அதிக நன்கொடை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளன.