எங்கள் எண்ணெய் இல்லாமல் உலகளாவிய எரிசக்தி சந்தை நிலையாக இருக்காது - ரஷ்யா
அமெரிக்கா தடைகளை தளர்த்தியதன் மூலம் தங்களது எண்ணெய் இல்லாமல், உலகளாவிய எரிசக்தி சந்தை நிலையாக இருக்க முடியாது என்று ரஷ்யா கூறியுள்ளது.
எரிபொருள் விநியோகம்
மத்திய கிழக்கின் போரால் ஆசிய நாடுகளுக்கு எரிபொருள் விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அவர், எந்த நாடும் ரஷ்ய எண்ணெயை இந்த 30 நாட்களில் வாங்கலாம் என்று கூறினார். இதன்மூலம் சுமார் 125 மில்லியன் பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெய் தற்போது கப்பல்களில் தயார் நிலையில் உள்ளதாக செய்தி வெளியானது.
அதேசமயம் இந்த வாரம் எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 120 டொலராக உயர்ந்தன. இது 2022யில் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்கு பிறகு மிக உயர்ந்த விலையாகும்.
தவிர்க்க முடியாதது
இந்த நிலையில், அமெரிக்கா கூடுதல் தடைகளை நீக்குவது பெருகிய முறையில் தவிர்க்க முடியாதது என்று ரஷ்யாவின் பொருளாதாரத் தூதர் கிரில் டிமிட்ரிவ் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "ரஷ்ய எண்ணெய் இல்லாமல், உலகளாவிய எரிசக்தி சந்தை நிலையானதாக இருக்க முடியாது என்பதை அமெரிக்கா திறம்பட ஒப்புக்கொள்கிறது. வளர்ந்து வரும் எரிசக்தி நெருக்கடியின் இடையில், பிரஸ்ஸல்ஸ் அதிகாரத்துவத்தில் சிலரின் எதிர்ப்பு இருந்தபோதிலும், ரஷ்ய எரிசக்தி ஆதாரங்கள் மீதான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது பெருகிய முறையில் தவிர்க்க முடியாததாகத் தோன்றுகிறது" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |