குப்பைத் தொட்டியில் கைவிட்ட போது கிடைத்த தங்க கட்டிகள்! கோடிகளில் மதிப்பு... புகைப்படங்கள்
விமான நிலையத்தில் இருந்த குப்பை தொட்டியில் இருந்து பெரும் மதிப்புள்ள தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சரண் சிங் விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் தங்க கட்டிகள் கிடப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்று சோதனையிட்ட அதிகாரிகள், குப்பைத் தொட்டியில் இருந்து 6 தங்க கட்டிகளை கைப்பற்றினர்.
அந்த தங்க கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.1,63,07,432.05 (இலங்கை மதிப்பில்) இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தங்க கட்டிகளை சட்டவிரோதமாக கடத்தி வந்தவர்கள் தான் அவற்றை குப்பைத் தொட்டியில் வீசியிருக்கக் கூடும் என்று தெரிவித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடிவில் தங்க கட்டிகள் தொடர்பாக மேலும் புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.