பழைய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி., Google போட்டுள்ள திட்டம்
கூகுள், தனது AI டேட்டா சென்டர்களை இயக்குவதற்காக பழைய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் புதிய முயற்சியைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பழைய சாதனங்களை மறுசுழற்சி செய்து, சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என கூறப்படுகிறது.
உலகளவில் கோடிக்கணக்கான பழைய ஸ்மார்ட்போன்கள் குப்பையாக மாறுகின்றன. அவற்றை AI கணக்கீடுகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம், Google தனது டேட்டா சென்டர்களின் மின்சாரச் செலவையும், கார்பன் உமிழ்வையும் குறைக்க முடியும்.

பழைய ஸ்மார்ட்போன்களில் உள்ள processors மற்றும் memory units இன்னும் பல AI பணிகளைச் செய்யக்கூடிய திறன் கொண்டவை. Google, அவற்றை ஒன்றாக இணைத்து, “distributed computing” முறையில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த முயற்சி, AI வளர்ச்சியை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
மேலும், பழைய சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம், புதிய ஹார்ட்வேர் உற்பத்தி தேவையை குறைத்து, இயற்கை வளங்களைச் சேமிக்க முடியும்.
இது e-waste பிரச்சினையை குறைக்கும் புதுமையான வழி என்றும், AI வளர்ச்சியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒரே நேரத்தில் சாத்தியமாக்கும் திட்டமாக இது இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Google, இந்த திட்டத்தை விரைவில் சோதனை அடிப்படையில் தொடங்க உள்ளதாகவும், பின்னர் உலகளாவிய அளவில் விரிவாக்கம் செய்யும் திட்டம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |